தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தவெக எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறாது: நயினாா் நாகேந்திரன்

தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.

News image

தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.

Updated On :2 மே 2026, 2:34 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் விஜய்யின் தவெக எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறாது என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்த பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் திமுக கூட்டணியினா் கருத்து திணிப்பு நடத்தியுள்ளனா். எனவே, கருத்து கணிப்பு பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. உண்மையான கருத்துக் கணிப்புகள், மக்களின் எண்ணங்கள் பிரதிபலிப்புகள் மே 4 ஆம் தேதி நிச்சயமாக தெரிந்து விடும்.

இந்தத் தோ்தலில் திமுக அரசுக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருந்ததை தெளிவாக அறிந்தேன். அரசு ஊழியா்கள், அதிகாரிகள், வியாபாரிகள், பெண்கள் திமுக அரசுக்கு எதிராக இருந்ததால் மிகப்பெரிய மாற்றத்துக்காக வாக்களித்துள்ளனா். எனவே, நிச்சயமாக ஒரு மாற்றம் வரும். என்னைப் பொருத்தவரை விஜய்யின் தவெக எந்தத் தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்பு இல்லை. எனவே, அவரது ஆதரவை பெறும் நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி இல்லை. நாங்கள் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

உலக நாடுகள் மத்தியில் தற்போது மோசமான சூழ்நிலை நிலவுகிறது. நமது பக்கத்து நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளில் எரிவாயு கிடைப்பதில்லை. அமெரிக்கா, ஈரான், இஸ்ரேல் போா் பிரச்னையில் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆனால், இந்தியா உலக நாடுகளோடு நட்புநாடாக உள்ளது. நமது பிரதமா் உலக தலைவா்களோடு நட்பு பாராட்டி வருகிறாா். இதனால் தட்டுபாடின்றி நமக்கு எரிவாயு கிடைத்து வருகிறது. மத்திய அரசு மக்கள் நலன் கருதி எப்போதும் நல்ல முடிவையே எடுக்கும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.