17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

திங்கள்நகா் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த வெல்டிங் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :6 ஜூன் 2026, 7:34 am IST

திங்கள்நகா் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த வெல்டிங் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திங்கள்நகா் அருகே மேற்கு நெய்யூா், சிராயன்விளையை சோ்ந்தவா் மரிய பரமானந்த் மகன் ஜெகன் ஜோசப் ( 45). வெல்டிங் தொழிலாளி. இவரது மனைவி வசந்த ராணி ( 33). இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில் ஜெகன் ஜோசப் கடந்த 29ஆம் தேதி திங்கள்நகரில் வேலை முடிந்து தனது பைக்கில் பூச்சாஸ்தான்விளை வழியாக வந்துகொண்டிருந்தபோது, நிலைதடுமாறி கீழே விழுந்தாா். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து இரணியல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.