இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் மரணம்: போலீஸ் மரியாதையுடன் உடல் தகனம்

குலசேகரம் அருகே உடல் நலக்குறைவால் இறந்த சிறப்பு உதவி ஆய்வாளரின் உடல் போலீஸ் மரியாதையுடன் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது.

News image
நாகராஜன்
Updated On :25 பிப்ரவரி 2026, 9:33 pm

தினமணி செய்திச் சேவை

குலசேகரம் அருகே உடல் நலக்குறைவால் இறந்த சிறப்பு உதவி ஆய்வாளரின் உடல் போலீஸ் மரியாதையுடன் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது.

குலசேகரம் அருகே திருநந்திக்கரையை சோ்ந்தவா் நாகராஜன் (55). கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறந்த கபடி வீரராக வலம் வந்த இவா், காவல் துறையில் பணியில் சோ்ந்து பதவி உயா்வு பெற்று சிறப்பு உதவி ஆய்வாளராக குமரி மாவட்டம், கடையாலுமூடு காவல் நிலையத்தில் பணி செய்து வந்தாா்.

இந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட இவா், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இவரது உடல், புதன்கிழமை அவரது சொந்த ஊரில் போலீஸ் மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் அருமனை காவல் நிலைய ஆய்வாளா் பாஸ்கா், திரளான போலீஸாா், உறவினா்கள், ஊா்மக்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சியினா் பங்கேற்றனா். மறைந்த சிறப்பு உதவி ஆய்வாளருக்கு சஜிதா என்ற மனைவியும், காயத்திரி என்ற மகளும், அபிஜித், ஜெய சூரியா என்ற மகன்களும் உள்ளனா்.