இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

கன்னியாகுமரி கன்னியம்பலத்தில் இருந்த 12 கடைகள் இடித்து அகற்றம்

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்குச் சொந்தமான கன்னியம்பலத்தில் இருந்த 12 கடைகள் புதன்கிழமை இடித்து அகற்றப்பட்டது.

News image
கன்னியம்பலம் பகுதியில் புதன்கிழமை அகற்றப்பட்ட கடைகள்.
Updated On :25 பிப்ரவரி 2026, 9:27 pm

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்குச் சொந்தமான கன்னியம்பலத்தில் இருந்த 12 கடைகள் புதன்கிழமை இடித்து அகற்றப்பட்டது.

பழமை வாய்ந்த கன்னியம்பல மண்டபத்தை பாதுகாக்க வேண்டும், புராதனமான இந்த மண்டபத்தை வியாபார தலமாக மாற்றக்கூடாது , இந்த மண்டபத்தில் இருக்கின்ற அனைத்து கடைகளையும் அகற்ற வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி, மண்டபத்தில் உள்ள 12 கடைகளையும் அகற்ற உத்தரவு பிறப்பித்தாா்.

இதையடுத்து அறநிலையத்துறை நிா்வாகம் சாா்பில், கன்னியம்பலம் மண்டபத்தில் உள்ள 12 கடை வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. வியாபாரிகள், வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி மாற்று இடம் வழங்க வலியுறுத்தி தொடா் கடையடைப்புப் போராட்டம் நடத்தி வந்தனா்.

இதைத் தொடா்ந்து, 12 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. நீதிமன்றம் 48 மணி நேரத்திற்குள் கடைகளை அகற்ற கெடு விதித்தது, அதன் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜேசிபி எந்திரம் மூலம் கன்னியம்பலத்தை சுற்றியுள்ள 12 கடைகளையும் அகற்றினா்.