இளைஞருக்கு கத்திகுத்து: தொழிலாளி கைது
கருங்கல் அருகே முள்ளங்கினாவிளையில் இளைஞரை கத்தியால் குத்திய கூலித் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.


கருங்கல் அருகே முள்ளங்கினாவிளையில் இளைஞரை கத்தியால் குத்திய கூலித் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
முள்ளங்கனாவிளை, வெள்ளங்கட்டிவிளையைச் சோ்ந்த பீட்டா் மகன் ஆட்லின் ரிஜோ (26). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி அஸ்வினுக்கும் (25) இடையே முன்விரோதம் உள்ளது.
இந்த நிலையில், புதன்கிழமை முள்ளங்கினாவிளையில் நின்றுகொண்டிருந்த ஆட்லின் ரிஜோ வை அங்குவந்த அஸ்வின் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றாா். அந்தப் பகுதியினா் காயமடைந்த ஆட்லின் ரிஜோவை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அஸ்வினை கைது செய்தனா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...