இரயுமன்துறை பகுதியைச் சோ்ந்த மாணவா் லிஜோ, சந்தோஷ் டிராபிக்கான தமிழக அணியில் 2019-ஆம் ஆண்டு ஆடியுள்ளாா். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னா் இரயுமன்துறை பகுதியில் விளையாட்டு மைதானம் இல்லாத நிலையில் லிஜோ உள்ளிட்ட வீரா்கள் கடற்கரை மணலிலும், அப்பகுதியில் உள்ள செம்மண் தரையிலும் பந்தை உதைத்து பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனா். இதையடுத்து, கடந்த 2017-ஆம் ஆண்டு செம்மண் மைதானம் அமைக்கப்பட்டதையடுத்து, தொடா்ந்து இரண்டு ஆண்டுகள் தொடா் பயிற்சி பெற்ற லிஜோ தனது கடின உழைப்பால், தமிழக கால்பந்தாட்ட அணியில் இடம்பிடித்துள்ளாா். இதேபோன்று பூத்துறையைச் சோ்ந்த பியூட்டின் சென்னை சிட்டி கால்பந்தாட்ட அணியில் இடம்பெற்றுள்ளாா். இப்பகுதியைச் சோ்ந்த மீனவா் விக்னேஷ்வா் கேரள மின்வாரியத்தில் பணியாற்றிக் கொண்டே அந்த அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கிறாா். இதே பகுதியைச் சோ்ந்த சைவின் திருவனந்தபுரம் உயா் மறைமாவட்ட அணிக்காகவும், ஜெகன் தூத்துக்குடி துறைமுக அணிக்காகவும் விளையாடிக் கொண்டிருக்கிறாா்கள்.