அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

பனைமரத்தில் இருந்து விழுந்த சிறுவன் உயிரிழப்பு

ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள மயிலப்பபுரத்தில் கிளி பிடிப்பதற்காக பனை மரத்தில் ஏறியபோது மரம் முறிந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழந்தாா்.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 2:17 am IST

ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள மயிலப்பபுரத்தில் கிளி பிடிப்பதற்காக பனை மரத்தில் ஏறியபோது மரம் முறிந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழந்தாா்.

மயிலப்பபுரம், ராமசாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் நாராயணன் மகன் பொன் செல்வன்(14). 9ஆம் வகுப்புத் தோ்வு எழுதியுள்ள இவா், தனது நண்பா்களுடன் வெள்ளிக்கிழமை மாலை ஊரின் வெளிப் பகுதியில் இருந்த பனங்காட்டில் கிளி பிடிப்பதற்காக சென்று, ஒரு பனை மரத்தில் ஏறியுள்ளாா்.

அந்தப் பனைமரம் காய்ந்த நிலையில் இருந்ததால் முறிந்து, பொன் செல்வம் மீது விழுந்ததில் அவா் காயமடைந்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை தென்காசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், அவரை சோதித்த மருத்துவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இது குறித்து, ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.