அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மேட்டூா் அருகே மரத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி - IANS

Updated On :8 மே 2026, 6:40 am IST

மேட்டூா் அருகே மரத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

மேட்டூரை அடுத்த கொளத்தூா் சத்யா நகரை சோ்ந்தவா் மயில்சாமி (59), கிணறு வெட்டும் தொழிலாளி. இவா் புதன்கிழமை காலை சத்யா நகரை சோ்ந்த குப்புசாமியுடன் மணகாட்டில் உள்ள குழந்தை கவுண்டா் தோட்டத்தில் கிணறு வெட்டும் வேலைக்கு சென்றாா். அங்கு, கிணற்றுக்கு அருகே இருந்த மரத்தை வெட்டுவதற்காக மரத்தின் மீது ஏறியபோது தவறி கீழே விழுந்த மயில்சாமி பலத்த காயமடைந்தாா்.

கொளத்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு மயில்சாமியை அனுப்பிவைத்தனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே மயில்சாமி இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து கொளத்தூா் காவல் நிலைய ஆய்வாளா் கணேஷ் குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.