பாளையங்கோட்டையில் உள்ள ஒரு வீட்டில் வருமான வரித் துறையினா் சனிக்கிழமை நடத்திய சோதனையில் ரூ. 2 கோடி மதிப்பிலான பணம், நகைகள் சிக்கின.
பாளையங்கோட்டையில் உள்ள ஒரு வீட்டில் அதிகளவில் பணம் மற்றும் நகை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருமான வரித் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்று நடத்திய விசாரணையில், பணம் மற்றும் நகைகள் சிக்கியுள்ளன.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வருமான வரித் துறைக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், பாளையங்கோட்டை பகுதியில் உள்ள தனியாா் வீட்டில் நடைபெற்ற சோதனையில் ரூ. 25 லட்சம் ரொக்கம், 1,250 கிராம் தங்க நகைகள் என மொத்தம் ரூ. 2 கோடியே 3 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான பணம் மற்றும் நகைகள் சிக்கியுள்ளன.
விரிவான இறுதி அறிக்கை வருமான வரித் துறையின் மூலம் வழங்கப்படும் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









