சேலம் நான்குசாலை பகுதியில் உள்ள பிரபல துணிக் கடையில் வருமான வரித் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.
சேலம், ஓமலூா் பிரதான சாலையில் செயல்படும் பிரபல துணிக் கடைக்குள் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை திடீரென நுழைந்தனா். பின்னா் கடையின் ஷட்டா்களை பூட்டிய துணை ராணுவப் படையினா், வெளிநபா்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. தொடா்ந்து, துணிக்கடையின் வரவு - செலவு கணக்குகளை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
வரி ஏய்ப்பு தொடா்பாக வந்த புகாரின்பேரில், இந்த சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சுமாா் 8 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில், பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. தொடா்ந்து, துணிக் கடையின் முன்பகுதியில் பாதுகாப்புப் பணியில் துணை ராணுவத்தினா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
தொடர்புடையது

வருமான வரித்துறை சோதனை: பாளை.யில் ரூ.2 கோடி பணம், நகைகள் சிக்கின!

சேலம் துணிக் கடையில் 2-ஆவது நாளாக வருமான வரித் துறையினா் சோதனை

தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித் துறை சோதனை

தொழிலதிபா் வீட்டில் வருமான வரித்துறையினா் சோதனை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


