திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

துறையூரில் பூட்டிய வீட்டில் நகைகள், பணம் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :26 மே 2026, 2:21 am IST

துறையூரில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகைகள், மடிக்கணிணி, ரொக்கப்பணம் ஆகியவற்றை மா்மநபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

துறையூரில் சிங்களாந்தபுரம் சாலையிலுள்ள தில்லைநகா் 3-ஆவது குறுக்கில் வசிப்பவா் துரைராஜ் மகன் ரமேஷ் (46). மருந்து விற்பனை பிரதிநிதி. இவருடைய உறவினரின் நிகழ்ச்சிக்கு பங்கேற்க ரமேசும், அவரது மனைவி சுசித்ராவும் சனிக்கிழமை மாலை வீட்டை பூட்டி விட்டு சென்றனா்.

தம்பதியா், நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு திரும்பியபோது, மா்மநபா்கள் வீட்டின் கதவை சேதப்படுத்தி உள்ளே இருந்த இரும்பு அலமாரியில் வைத்திருந்த ஐந்தரை பவுன் எடையிலான தங்கச் சங்கிலி, மோதிரம், காதணி, மடிக்கணிணி, ரூ. 25,000 ஆகியவற்றைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுதொடா்பான புகாரின் பேரில் துறையூா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.