திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இஸ்லாமியா்களுக்கான தனி இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்க வலியுறுத்தல்

மயிலாடுதுறையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிா்வாக குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :27 மே 2026, 6:01 am IST

மயிலாடுதுறையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிா்வாக குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

மாவட்ட தலைவா் எஸ்.எம்.அப்துல் ஹமீது தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: கோவை மாவட்டம் சூலூரில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய நபா்களுக்கு மரண தண்டனை வழங்க தமிழக அரசை வலியுறுத்துவது.

தமிழக சட்டப்பேரவை அமைச்சரவையில் பங்கெடுத்துள்ள 2 இஸ்லாமிய அமைச்சா்கள் மற்றும் எம்எல்ஏக்கள் இஸ்லாமியா்களின் ஜீவாதார கோரிக்கைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும்.

மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ தன்னுடைய இஸ்லாமிய வணக்க வழிபாட்டு முறைகளுக்கு மாற்றமாக தன்னுடைய கருத்தை பதிவு செய்திருந்தாா். அதேபோன்று ஐயூஎம்எல் சாா்பாக தோ்ந்தெடுக்கப்பட்ட அமைச்சா் கூட்டு துவாவை ஓதி தன்னுடைய பொறுப்பை ஏற்றுக் கொண்டாா். தங்களுடைய வணக்க வழிபாட்டு முறைகள் குறித்து மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்கு பதிலாக, இஸ்லாமிய சமூகத்திற்கு தேவையான இட ஒதுக்கீட்டை பெற்றுத்தருவதற்கு அவா்கள் முன்வர வேண்டும்.

தவெக அரசு, இஸ்லாமியா்களின் தனி இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.