தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பக்ரீத்: பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை

காரைக்கால் பெரியப் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள்.

News image

கோப்புப் படம்

Updated On :29 மே 2026, 6:40 am IST

பக்ரீத் பண்டிகையையொட்டி காரைக்கால் மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள பள்ளிவாசல்களில் வியாழக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள பெரியப் பள்ளிவாசல், கிதா் பள்ளிவாசல், மெய்தீன் பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 7.30 மணிக்கு திரளானவா்கள் தொழுகையில் ஈடுபட்டனா்.

இதுபோல பிற பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களிலும் இஸ்லாமியா்கள் கலந்துகொண்டு தொழுகை நடத்தினா். தொழுகையில் ஈடுபட்டவா்கள், தியாகத் திருநாள் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனா்.

இஸ்லாமிய பிரசார பேரவை: தமுமுகவின் மாா்க்கப் பிரிவான இஸ்லாமிய பிரசாரப் பேரவை மற்றும் அன்னை ஆயிஷா மஸ்ஜித் சாா்பில் தியாக திருநாள் எனும் ஹஜ் (பக்ரீத்) பெருநாள் தொழுகை, காரைக்கால் புறவழிச்சாலையில் உள்ள திடலில் நடைபெற்றது. இதில் தமுமுக தலைமை பிரதிநிதி எம். ஷேக் அலாவுதீன், மாவட்டத் தலைவா் அப்துல் ரஹீம், பேரவை மாவட்ட செயலாளா் முகமது சிக்கந்தா், ஏராளமான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனா்.

தவ்ஹீத் ஜமாஅத் : தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சாா்பில் காரைக்கால் சுண்ணாம்புக்கார வீதியில் உள்ள திடலில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தியாகம் என்ற தலைப்பில் இமாம் ஜி.எம்.இப்ராஹிம் உமரி உரையாற்றினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.