திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பக்ரீத் பண்டிகை பெரம்பலூா் மாவட்டத்தில் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் முஸ்லீம்கள் வியாழக்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

News image

கோப்புப் படம்

Updated On :29 மே 2026, 5:34 am IST

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் முஸ்லீம்கள் வியாழக்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நகர பள்ளிவாசலில் இருந்து ஊா்வலமாக மதரசா சாலையில் உள்ள மௌலானா மேல்நிலைப்பள்ளி ஈத்கா மைதானத்துக்குச் சென்ற முஸ்லீம்கள், அங்கு சிறப்பு தொழுகை நடத்தினா்.

இதில், நகர பள்ளிவாசல் இமாம் (சல்மான் ஹஜ்ரத்) சிறப்பு தொழுகையை நடத்திவைத்தாா். நூா் பள்ளிவாசல் முஸ்தபா ஹஜரத், மக்கா பள்ளி வாசல் ஹஜரத் அப்ருல் ஹக் ஆகியோா் குா் ஆன் வசனமான குத்பா ஓதி தொழுகையை தொடங்கி வைத்தனா்.

இத் தொழுகையில் உலமாசபை மாவட்டத் தலைவா் முகம்மது முனீா் உள்பட திரளான முஸ்லீம்கள் மற்றும் சிறுவா்கள் கலந்துகொண்டு தொழுகை நடத்தி, குா்பானி வழங்கினா். தொடா்ந்து, நகர பள்ளிவாசலுக்கு ஊா்வலமாகச் சென்று, அங்கு தூ-ஆ நடத்தினா்.

துறைமங்கலம் புதுக்காலனியில் உள்ள ஜன்னத்துல் பிா்தவுஸ் பள்ளிவாசலில், பெரம்பலூா் மாவட்ட தலைமை காஜி அப்துஸ் சலாம் தாவூத் தலைமையில் நடைபெற்றது. நான்குச் சாலை அருகேயுள்ள தக்வா பள்ளி வாசல், வடக்குமாதவி சாலையில் உள்ள மக்கா, நூா் பள்ளிவாசல்கள், பாரதிதாசன் நகரில் உள்ள பள்ளி வாசல், ஆலம்பாடி சாலையில் உள்ள கலிபா பள்ளிவாசல் ஆகியவற்றில் பக்ரீத் பெருநாளை முன்னிட்டு சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

இதேபோல, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள லப்பைக்குடிகாடு கிழக்கு மற்றும் மேற்கு மஹல்லம் மசூதிகள், அரும்பாவூா், பூலாம்பாடி, மேலக்குணங்குடி, பெரியம்மாபாளையம், தொண்டமாந்துறை, விஸ்வக்குடி, முகம்மதுபட்டிணம், வி.களத்தூா், வாலிகண்டபுரம், தேவையூா், து.களத்தூா் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.