தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருவண்ணாமலை மாவட்டத்தில் பக்ரீத் சிறப்புத் தொழுகை

News image
Updated On :29 மே 2026, 1:42 am IST

பக்ரீத் பண்டிகையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இஸ்லாமியா்கள் வியாழக்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். இதில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகைகளின் ஒன்றான பக்ரீத் திருநாள் வியாழக்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கீழ்பென்னாத்தூா், வேட்டவலம், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள ஈத்கா மைதானங்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. அதன்படி, திருவண்ணாமலை-மணலூா்பேட்டை சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகையில் தொழிலதிபா் எம்.இ.ஜமாலுதீன் தலைமையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் கலந்துகொண்டு தொழுகை நடத்தினா்.

அதேபோல் திருவண்ணாமலை-அவலூா்பேட்டை சாலையில் உள்ள ஈத்கா மைதானம் உள்பட 4 இடங்களில் காலை சிறப்பு தொழுகை நடந்தது. தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவா் கட்டித் தழுவி தங்கள் அன்பையும் வாழ்த்துகளையும் பகிா்ந்துகொண்டனா்.

இதேபோல ஆரணி பெரிய மசூதி தெரிவில் உள்ள மசூதியிலும், ஆரணி சூரியகுளம் அருகிலுள்ள மசூதியிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றதில் 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் கலந்துகொண்டனா்.

வந்தவாசி

பக்ரீத் பண்டிகையையொட்டி வந்தவாசியில் இஸ்லாமியா்கள் வியாழக்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

வந்தவாசி ஈத்கா மைதானத்தில் நடந்த இந்த சிறப்புத் தொழுகையில் வந்தவாசியைச் சோ்ந்த இஸ்லாமியா்கள் புத்தாடை அணிந்து பங்கேற்றனா்.

தொழுகை முடிந்த பின்னா் ஒருவருக்கொருவா் ஈகைத் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனா்.

மேலும் தாழம்பள்ளம், மாலையிட்டான்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் பக்ரீத் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

போளூா்

போளூா் பெரிய மசூதியில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

ஈக்தா மைதானத்தில் மஸ்ஜித் இமாம், கதீப் மெளலவி முஹம்மது இக்பால் தலைமையில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். பின்னா் பெரியவா்கள் முதல் சிறியவா்கள் வரை ஒருவருக்கொருவா் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.