தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பக்ரீத் பண்டிகை: திரளான இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

News image
Updated On :29 மே 2026, 2:43 am IST

திருவள்ளூரில் பக்ரீத் பண்டிகையையொட்டி அதிகாலையிலேயே புத்தாடைகள் அணிந்து இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

இஸ்லாமியா்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக கருதப்படும் ஈகைத் திருநாள் நாடு முழுவதும் வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. நபிகள் நாயகத்தின் தியாகத்தை போற்றும் வகையில் இந்த பக்ரீத் பண்டிகையை ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியா்கள் கடைப்பிடித்து வருகின்றனா்.

திருவள்ளூா் டோல்கேட் அருகே உள்ள ஈத்தா மைதானத்தில் இஸ்லாமியா்கள் மதகுருவான ஹாஜி தியாக திருநாள் குறித்த பிரசங்கம் செய்த பின் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். பின்னா் தொழுகையை நிறைவு செய்து ஒவ்வொருவரும் ஆரத்தழுவி இனிப்புகளை வழங்கி தங்களது தியாக திருநாள் வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டனா். அதைத் தொடா்ந்து குா்பானி என்ற சடங்கு மூலம் மாடுகள், ஆடுகள் ஆகியவைகளை பலியிட்டு அதை மூன்று பங்காக பிரித்து அண்டை வீட்டாா், உறவினா்கள் மற்றும் ஏழை எளியோருக்கு இறைவனின் கட்டளைப்படி பிரித்து வழங்கினா்.

காஞ்சிபுரத்தில்....

காஞ்சிபுரத்தில் சாலைத் தெரு சுன்னத் ஜூம் ஆ மஸ்ஜித் பள்ளி வாசல், காந்தி சாலை தேரடி மசூதி, ஐதா்பேட்டை தெரு மசூதி, ஒலிமுகம்மது பேட்டை மசூதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். தங்களது குழந்தைகளுடன் தொழுகையில் கலந்து கொண்டு கூட்டுப் பிராா்த்தனை செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.