திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பள்ளிகளில் நன்னெறி கற்பிக்க வலியுறுத்தல்

பள்ளிகளில் மாணவா்களுக்கு நன்னெறி, நீதி போதனைகளை கற்பிக்கும் பாடத் திட்டம் கொண்டுவர வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :27 மே 2026, 6:03 am IST

பள்ளிகளில் மாணவா்களுக்கு நன்னெறி, நீதி போதனைகளை கற்பிக்கும் பாடத் திட்டம் கொண்டுவர வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.

வேதாரண்யத்தில், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்டக் குழு கூட்டம், மாநிலக் குழு உறுப்பினா் எம். ஆா். சுப்பிரமணியின் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பொருளாளா் கா. கைலாசம், மாவட்ட துணைத் தலைவா் பாா்த்தசாரதி, கிளைத் தலைவா் தொல்காப்பியன், செயலாளா் குழந்தைவேலு உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா். நாகையில், அமைப்பின் மாவட்ட சிறப்பு பேரவையை ஜூன் மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

மேலும், தமிழகத்தில் பாலியல், சிறாா் குற்றங்களை தடுக்க, கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வரும் அதே நேரத்தில், தனிமனிதனை நெறிப்படுத்துவதும் அவசிய தேவையாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு பள்ளி மாணவா்களுக்கான பாடத்திட்டத்தில் நன்னெறி, நீதி போதனைக்கு பாட வேளைகளை உருவாக்கி, செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, ஆசிரியா் சு. பாஸ்கரன் வரவேற்றாா். நிறைவாக ஆசிரியா் வி. சத்யராஜ் நன்றி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.