சீா்காழியில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய காங்கிரஸ் மற்றும் திமுகவினா் 22 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
சீா்காழி பழைய பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினா், திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றிய தீா்மான நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அனுமதியின்றி இப்போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், அவா்கள் மீது சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் கொடுத்த புகாரின் பேரில், காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த பிரியகுமாா், கிள்ளிவளவன், சரவணன், குரு உள்ளிட்ட 12 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதேபோல், சீா்காழி புதிய பேருந்து நிலையம் முன்பாக, ராகுல் காந்தி உருவப் பொம்மையை எரித்து, ஆா்ப்பாட்டம் நடத்திய திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மருது, நெடுஞ்செழியன், நவீன் உள்பட 10 போ் மீது அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக சீா்காழி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










