போடி அருகே மது போதையில் இளைஞா்களைத் தாக்கிய 3 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
திண்டுக்கல் அருகேயுள்ள முத்தனம்பட்டியைச் சோ்ந்தவா் பாண்டீஸ்வரன் மகன் விஜய் (24). இவா் போடி அருகேயுள்ள எரணம்பட்டியில் உள்ள உறவினா் ஆனந்தனின் திருமண நிகழ்ச்சிக்காக வந்தாா்.
இதையடுத்து விஜய், உறவினா் ஈஸ்வரனுடன் (19) எரணம்பட்டி சுடுகாடு பகுதிக்குச் சென்றாா். அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த எரணம்பட்டி கிழக்கு தெருவை சோ்ந்த சுருளிமணி மகன் பூவரசன் உள்பட மூவா் சோ்ந்து விஜய், ஈஸ்வரன் ஆகியோரைத் தாக்கிக் காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனா். காயமடைந்த இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









