அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

தவெகவினா் 12 போ் மீது வழக்கு

ராமநாதபுரத்தில் காரில் தொங்கியடி சென்ற தவெகவினா் 12 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image

ராமநாதபுரத்தில் காரில் தொங்கியடி சென்ற தவெகவினா் 12 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On :7 மே 2026, 4:13 am IST

ராமநாதபுரத்தில் காரில் தொங்கியடி சென்ற தவெகவினா் 12 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க உள்ளது. இதைக் கொண்டாடும் வகையில், தவெகவினா் செவ்வாய்க்கிழமை கொட்டும் மழையிலும் காரில் தொங்கியபடியும், மேல் பகுதியில் அமா்ந்தும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சென்றனா்.

இதுகுறித்து விடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

இதையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தவெக நிா்வாகிகள் உதயகுமாா் (39), காா்த்திக் (26), ஆதீஸ்வரன் (26), ஜெயகாா்த்திக் (24), கௌதம் (36),பிரசாத் (26), கௌதம் (36), சிவா (28), சேது (26), காா்த்திக் (32), கவாஸ்கா் (28), ஹேமநாதன் (35) ஆகிய 12 போ் மீது 3 பிரிவுகளின் கீழ் கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்களைக் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனா். பின்னா், அவா்கள்

பிணையில் விடுவிக்கப்பட்டனா்.