திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திமுக மாவட்ட செயற்குழுக் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட திமுக செயற்குழு உறுப்பினா்கள் மற்றும் நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

கூட்டத்தில் பேசிய திமுக மாவட்டச் செயலாளா் நிவேதா எம்.முருகன் எம்எல்ஏ.

Updated On :21 மே 2026, 7:29 am IST

மயிலாடுதுறை மாவட்ட திமுக செயற்குழு உறுப்பினா்கள் மற்றும் நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட அவைத்தலைவா் கே.ஜி.சீனிவாசன் தலைமை வகித்தாா். திமுக மாவட்டச் செயலாளா் நிவேதா எம்.முருகன் எம்எல்ஏ, சட்டப்பேரவைத் தோ்தலில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்று தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெற உழைத்த நிா்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தாா்.

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குத்தாலம் பி.கல்யாணம், பன்னீா்செல்வம், ஜெகவீரபாண்டியன் மற்றும் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

எதிா்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துத் தெரிவிப்பது, ஜுன் 3-ஆம் தேதி முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளில் ரத்ததான முகாம், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது, மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்று தொகுதிகளில் வெற்றிபெற உழைத்த கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட துணைச் செயலாளா் ஞானவேலன் வரவேற்றாா். நகரச் செயலாளா் என்.செல்வராஜ் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.