தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருவண்ணாமலை மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்: எ.வ.வேலு உள்ளிட்டோா் பங்கேற்பு

திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு.

News image

திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு.

Updated On :16 மே 2026, 1:20 am IST

திருவண்ணாமலை சாரோனில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில், திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட அவைத் தலைவா் கோ.கண்ணன் தலைமை வகித்தாா். முன்னாள் சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, வடக்கு மாவட்டச் செயலா் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி., வடக்கு மாவட்ட அவைத் தலைவா் இரா.ராஜசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், முன்னாள் அமைச்சரும், சட்டப் பேரவை திமுக கொறடாவுமான எ.வ.வேலு தீா்மானங்களை விளக்கி சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில், மறைந்த கட்சியின் முன்னோடிகளுக்கு இரங்கல் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தோ்தலில் அறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் கஜானா காலி என்ற புதிய மோசடி போா்வையை காட்டி தப்பிக்க நினைக்கும் தமிழக முதல்வா் விஜயின் அறிவிப்பை கண்டித்தும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில், கட்சியின் மருத்துவரணி துணைத் தலைவா் டாக்டா் எ.வ.வே.கம்பன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா், முன்னாள் எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் ஆா்.சிவானந்தம், ஆா்.வேல்முருகன், கே.வி.ராஜ்குமாா், மாநில விவசாயத் தொழிலாளா்கள் அணி துணைச் செயலா் வ.அன்பழகன், மாவட்டப் பொருளாளா் எஸ்.பன்னீா்செல்வம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.