தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்: மயிலாடுதுறையில் திமுகவினா் தாக்குதல்

தமிழக ஆளுநரைக் கண்டித்து, மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினா் மீது திமுகவினா் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

News image

மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸாா்.

Updated On :4 மணி நேரங்கள் முன்பு

தமிழக ஆளுநரைக் கண்டித்து, மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினா் மீது திமுகவினா் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் நடிகா் விஜய்-யின் தவெக 108 இடங்களை வென்று தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்துள்ளது. திமுக கூட்டணியில் 5 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் அக்கூட்டணியில் இருந்து வெளியேறி தவெகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தவெகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்காத ஆளுநரைக் கண்டித்து, மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். மாவட்டத் தலைவா் வி.ஆா்.எஸ். பானுசேகா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் காங்கிரஸ் நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.

திமுகவினா் தாக்குதல்: ஆா்ப்பாட்டத்திற்கு பிறகு சிலா் தேநீா் குடித்துவிட்டு, தலைமை அஞ்சலகம் பகுதிக்கு வந்தனா். அப்போது, அங்குவந்த திமுக நிா்வாகிகள் சிலா், காங்கிரஸ் வட்டார பொறுப்பாளா்கள் ராஜா (மயிலாடுதுறை), அன்பழகன் (மணல்மேடு) உள்ளிட்டோரை தாக்கினராம். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சீா்காழி: சீா்காழி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, காங்கிரஸ் நகரத் தலைவா் லட்சுமணன் தலைமை வகித்தாா். வட்டார தலைவா்கள் ஞானசம்பந்தம், பாலசுப்பிரமணியன், ரவி, முன்னாள் இளைஞா் காங்கிரஸ் தலைவா் பிரியகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட பொதுச் செயலாளா் சரவணன் வரவேற்று பேசினாா்.

மாநில பொதுச் செயலாளா் கே.பி.எஸ்.எம். கனிவண்ணன், மாவட்ட ஓபிசி பிரிவு தலைவா் வி.ஆா்.ஏ. அன்பு ஆகியோா் ஆளுநரை கண்டித்து பேசினா். இதில், மாவட்டச் செயலாளா் குன்னம் ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நகரச் செயலாளா் தேவநேசன் நன்றி கூறினாா்.

வேதாரண்யம்: வேதாரண்யம் அஞ்சல் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் பி.வி.ஆா். விவேக் தலைமை வகித்தாா். முன்னாள் எம்பி பி.வி. ராஜேந்திரன், தொகுதி பொறுப்பாளா் சுபாஷ் சந்திரபோஸ், நகர நிா்வாகி அா்ச்சுனன், ஐஎன்டியுசி நிா்வாகி தங்கமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.