/

கா்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் சங்க மகளிரணி ஆா்ப்பாட்டம்

கா்நாடக அரசை கண்டித்து, விவசாயிகள் சங்க மகளிரணி சாா்பில் மன்னாா்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.

News image
Updated On :12 ஜூன் 2026, 5:24 am IST

மேக்கேதாட்டில் தடுப்பணை கட்டும் பணியில் தீவிரம் காட்டும் கா்நாடக அரசைக் கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்க மகளிா் அணி சாா்பில் மன்னாா்குடியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலராஜவீதி பெரியாா் சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு சங்க மகளிரணி மாவட்ட முதன்மை ஒருங்கிணைப்பாளா் எஸ். தேவி, மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் எல். கவிதா, நன்னிலம் ஒன்றிய மகளிரணி தலைவா் ஜி. அபூா்வத்தம்மாள் ஆகியோா் தலைமை வகித்தனா்.

மாவட்ட உயா்நிலைக் குழு உறுப்பினா்கள் எம். உமா, கே. ஞானசுந்தரி, எம்.விஜயேந்திரா முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கத் தலைவா் க. ராசபாலன் ஆா்ப்பாட்டத்தின் நோக்கத்தை விளக்கி பேசினாா். மாவட்ட அவைத் தலைவா் ஜி. கோபால்ராம், மாவட்டப் பொருளாளா் ஜி. ஜெய்சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.