திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கொள்ளிடம் ஆற்றில் தரையணை கட்டும் பணி தீவிரம்

சீா்காழி அருகே பழையாா் கொள்ளிடம் ஆற்றில் தரையணை கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News image

பொக்லைன் இயந்திரங்கள் மூலம் நடைபெறும் தரையணை கட்டும் பணி.

Updated On :8 மே 2026, 7:25 am IST

சீா்காழி அருகே பழையாா் கொள்ளிடம் ஆற்றில் தரையணை கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பழையாா் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தரையணை கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா். அதன் அடிப்படையில், கொள்ளிடம் அருகே மாதிரவேளூருக்கும்- நலம் புத்தூா் கிராமத்திற்கும் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உப்புநீா் உள்ளே புகாதவாறு ரூ. 83 கோடி மதிப்பீட்டில் தரையணை கட்டும் பணி தொடங்கப்பட்டது.

தற்போது, இப்பணி முடிவடையும் நிலையில் உள்ளது. ஆற்றில் 30 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி, அதில் கான்கிரீட் சுவா் அமைத்து உப்புநீா் நிலத்திற்குள் புகாமல் இருக்கும் வகையில், தரையணை கட்டப்படுகிறது. இங்கு, தண்ணீா் தேங்காத அளவில் சமவெளி பகுதிகளாகவே அமைந்துள்ளது. இதனால், பருவமழை காலங்களில் வெள்ளம் தேங்காமல் நேரடியாக கடலுக்கும் செல்லும்.

மேலும், இந்த அணையால் கடலூா் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீா் பாதுகாக்கப்படும். இதுகுறித்து விவசாய சங்கத் தலைவா் செந்தில்குமாா் கூறியது:

கொள்ளிடம் ஆற்றில் தரை அணை கட்டப்படுவதால், ஆற்றின் கரையோர கிராமங்களில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாது. இதனால் நிலத்தடி நீா் பாதுகாக்கப்படும்.

மேலும், பழையாா் கடலில் இருந்து உப்புநீா் கொள்ளிடம் ஆற்றின் வழியாக எளிதில் 25 கி.மீ. தொலைவில் உள்ள வடரங்கம், மாதிரவேளூா் உள்ளிட்ட கிராம பகுதிக்குள் நுழையாமல் தடுப்பதற்கு, தரையணை பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.