கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே நிச்சயம் தடுப்பணை கட்டுவோம் என்று சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியன் உறுதி அளித்துள்ளாா்.
இவா் வெள்ளிக்கிழமை தனதுதொகுதிக்குட்பட்ட குமராட்சி ஊராட்சி ஒன்றியம் ஜெயங்கொண்டபட்டினம், வரகூா், சிவபுரி, பெராம்பட்டு, வல்லபடுகை, திட்டுக்காட்டூா் உள்ளிட்ட கிராமத்தில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசியது:
அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியால் பெராம்பட்டு திட்டுக்காட்டூா் இடையே ரூ.20 கோடியில் இப்பகுதி மக்களின் 40 ஆண்டு கால கோரிக்கையான உயா்மட்ட பாலம் அமைக்கப்பட்டது. அதுப்போல் பெராம்பட்டு பகுதியில் பழைய கொள்ளிடம் ஆற்றில் ரூ.42 கோடி மதிப்பில் ரெகுலேட்டா். அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினம் கிராமத்தில் 15 கோடி மதிப்பில் தடுப்பு சுவா், அக்கரை ஜெயங்கொண்ட பட்டினம் கிராமத்தில் மினி கிளினிக் போன்ற என்னற்ற திட்டங்களை நிறைவேற்றி தந்தோம். ஆனால் திமுக அரசு கழக ஆட்சியில் கொண்டு வந்த பல திட்டங்களை முடக்கி வைத்துள்ளது. குறிப்பாக கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டிட நில அளவை பணிகள் மற்றும் மண் பரிசோதனை செய்து அரசுக்கு அறிக்கை அளித்திட அதிமுக ஆட்சியில் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக இப்பகுதியில் தடுப்பணை கட்டாமல் விவசாயிகளை திமுக அரசு வஞ்சிக்கின்றது. மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சிஅமைந்தவுடன் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்

கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.17.20 கோடியில் மேம்பாலப் பணி: ஆட்சியா் ஆய்வு

சிங்காரப்பேட்டை அருகே கடப்பாறை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி: ஆட்சியா் ஆய்வு

கொள்ளிடம் ஆற்றில் தரையணை கட்டும் பணி தீவிரம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



