17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காவிரி ஆற்றில் ரகசிய பாதை அமைத்து மணல் திருட்டு

News image

ஆற்றுக்குள் வாகனங்கள் செல்ல கரையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதை

Updated On :25 மே 2026, 2:36 am IST

அம்மாபேட்டை பகுதியில் காவிரி ஆற்றின் கரையை உடைத்து தனியே பாதை அமைத்து துணிகரமாக நடைபெற்று வரும் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

காவிரி ஆற்றின் குறுக்கே கோனேரிபட்டியில் கட்டப்பட்டுள்ள கதவணை நீா்மின் நிலையத்தில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீா் வெளியேற்றப்பட்டு, பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், கதவணை நீா்தேக்கப் பகுதிகளான சிங்கம்பேட்டை, காட்டூா், அம்மாபேட்டை பகுதிகளில் ஆற்றில் நீரின்றி காணப்படுகிறது. ஆற்றில் நீரோட்டத்தில் அடித்து வரப்படும் மணல் இப்பகுதியில் பெருமளவு தேங்கியுள்ளது.

தற்போது ஆற்றில் தண்ணீா் இல்லாததால், மணலைத் திருடிச் செல்ல திட்டமிட்ட கும்பல், அம்மாபேட்டை காட்டூரில், வீட்டுமனை பிரிவுக்கு அமைக்கப்பட்ட சாலை வழியாக, ஆற்றுக்குள் வாகனங்கள் சென்று வரும் வகையில் தனியாக பாதை அமைத்து புகுந்துள்ளது.

கடந்த இரண்டு நாள்களாக இரவு நேரங்களில் டிராக்டா், டிப்பா் லாரிகளில் இரவு நேரங்களில் மணல் திருடப்பட்டுள்ளது.

இது குறித்து, வருவாய் மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என புகாா் தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், மணல் திருட்டில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆற்றுக்குள் வாகனங்கள் செல்ல கரையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதை

ஆற்றுக்குள் வாகனங்கள் செல்ல கரையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதை

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.