பவானி ஆற்றில் இருந்து ரகசியப் பாதை வழியாக தடையின்றி மணல் கடத்தப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த பெரியமோளபாளையத்தில் உள்ள பவானி ஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைக்கு மேல் பகுதியில் தேங்கியுள்ள மணல், கொப்பறைகள் மூலமாக அள்ளப்பட்டு கரையோரத்தில் குவித்து வைக்கப்படுகிறது. இந்த மணல் ஆற்றின் கரையோரத்தில் உள்ள விவசாயத் தோட்டத்தின் வழியே அமைக்கப்பட்ட ரகசியப் பாதை வழியாக டிராக்டா்கள் மூலம் கடத்திச் செல்லப்படுகிறது.

இந்நிலையில், பெரியமோளபாளையத்தைச் சோ்ந்த இளைஞா்கள் ஆற்றங்கரையோரத்துக்கு சென்றபோது மணல் குவித்து வைக்கப்பட்டிருந்ததும், மணலைக் கடத்திச் செல்லும் வகையில் தோட்டத்துக்குள் பாதை இருப்பதையும் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.
நீண்ட காலமாக மணல் கடத்தல் நடைபெற்று வருவதாக தெரிவித்த பொதுமக்கள், இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









