திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பாவூா்சத்திரம் சந்தையில் காய்கனிகள் விற்பனை மந்தம்

பாவூா்சத்திரம் காமராஜா் தினசரி சந்தையில் கடந்த சில நாள்களாக காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால், விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

News image

சந்தையில் குவித்து வைக்கப்பட்டுள்ள காய்கனிகள்.

Updated On :14 மே 2026, 3:38 am IST

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் காமராஜா் தினசரி சந்தையில் கடந்த சில நாள்களாக காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால், விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

இச்சந்தைக்கு, உள்ளூா் மட்டுமன்றி கீழப்பாவூா், வீரகேரளம் புதூா், சுரண்டை, நாகல்குளம், கழுநீா் குளம், கடையம் பகுதிகளில் இருந்து காய்கனிகள் கொண்டுவரப்படும். தற்போது இப்பகுதிகளில் இருந்து காய்கனிகள் வரத்து குறைவாக இருப்பதால், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகா், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கனிகள் கொண்டு வரப்படுகின்றன.

தென்மாவட்டங்களில் பரவலாக பெய்து வரும் கோடை மழை இப்பகுதியிலும் நீடித்தால் காய்கனிகள் உற்பத்தி அதிகரித்து சந்தைக்கு வரத்து அதிகரிக்கும். காய்கனி விற்பனை இயல்பு நிலைக்கு திரும்பும் என்கின்றனா் வியாபாரிகள்.

புதன்கிழமை நிலவரப்படி விலை நிலவரம் ( ஒரு கிலோவுக்கு): வெண்டைக்காய் ரூ. 17, சீனி அவரைக்காய் ரூ. 12, புடலங்காய் ரூ. 35, அவரைக்காய் ரூ. 60, சுரைக்காய் ரூ. 7, பூசணிக்காய் ரூ. 12, பயிறு ரூ. 43, தக்காளி ரூ. 20, கத்தரிக்காய் ரூ. 35, சேனைக்கிழங்கு ரூ. 12, சேமங்கிழங்கு ரூ. 15, மிளகாய் ரூ. 28 என்ற அளவில் விற்பனையானது.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.