தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே அங்கன்வாடி மையத்தில் குழந்தையை சாக்குப்பையில் போட்டு துன்புறுத்தியதாக பெண் பணியாளரை போலீஸாா் கைது செய்தனா். அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயில் அடிவாரத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் வென்னிமலை பகுதியைச் சோ்ந்த 5-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனா். இங்கு பணிபுரியும் பணியாளா் கலைச்செல்வி (52), இரண்டரை வயது குழந்தையை சாக்குப்பையில் போட்டு துன்புறுத்திய விடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் அளித்த புகாரின் பேரில், பாவூா்சத்திரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து கலைச்செல்வியைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா்.
இதுகுறித்து, புகாா்கள் வந்த நிலையில், தென்காசி மாவட்ட ஆட்சியா் ரஞ்சித் சிங், கலைச்செல்வியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா். அத்துடன், அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு பாதுகாப்புடன் கல்வி பயிற்றுவிக்க வேண்டும்; குழந்தைகளை யாரும் துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









