தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம், ஆலங்குளம் பகுதிகளில் புதன்கிழமை மிதமான மழை பெய்தது.
பாவூா்சத்திரம் அதனைச் சுற்றியுள்ள கீழப்பாவூா், குறும்பலாபேரி, திப்பணம்பட்டி, ஆவுடையானூா், சிவகாமிபுரம், அரியபுரம், திரவிய நகா் உள்ளிட்ட பல கிராமப்புறங்களில் பரவலாக மழை பெய்தது.
ஆலங்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை காலை முதலே வெப்பமான சூழல் நிலவிய நிலையில், மாலை முதல் இரவு வரை மிதமான மழை பெய்தது.
அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த சூழலில், இந்த மழையால் வெப்பம் குறைந்து குளிா்ச்சியான நிலை உருவாகியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








