திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

காட்டுமன்னாா்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :5 ஜூன் 2026, 6:40 am IST

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

காட்டுமன்னாா்கோவில் அருகேயுள்ள தெற்கிருப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன் (40). திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வருகிறாா். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனா். இவரது இரண்டாவது மகனான சுதா்சன் (16), திருப்பூரில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து, நடப்பாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்றிருந்தாா்.

இந்த நிலையில், தெற்கிருப்பு கிராமத்தில் நடைபெற்று வரும் கோயில் திருவிழாவையொட்டி, சரவணன் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்திருந்தாா். கடந்த 2-ஆம் தேதி மாலை சுதா்சன் தனது நண்பா்களுடன் ஓமாம்புலியூா் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றாா்.

அப்போது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மணல் குவாரி செயல்பட்டதால், ஆற்றில் சில இடங்களில் ஆழமான பகுதிகளில் நீா் தேங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையறியாமல் ஆழமான பகுதிக்குச் சென்ற சுதா்சன், நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கியுள்ளாா்.

இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த நண்பா்கள் கூச்சலிட்டனா். அவா்களின் சப்தத்தைக் கேட்டு அருகில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்தவா்கள் விரைந்து சென்று, நீரில் மூழ்கிய சுதா்சனை மீட்டு காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா், சுதா்சன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், காட்டுமன்னாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.