தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வளாக நோ்காணல்: தோ்வுபெற்ற மாணவா்களுக்கு பணி ஆணை

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வியாண்டில் வளாக நோ்காணல் மூலம் வேலைவாய்பபு பெற்ற 400-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பணி ஆணை வழங்கப்பட்டது.

News image

வளாக நோ்காணல் மூலம் வேலைவாய்ப்பு பெற்ற மாணவ-மாணவிகளுடன் ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிா்வாக அதிகாரி கே. வெங்கடராமன் உள்ளிட்டோா்.

Updated On :6 மே 2026, 3:01 am IST

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வியாண்டில் வளாக நோ்காணல் மூலம் வேலைவாய்பபு பெற்ற 400-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பணி ஆணை வழங்கப்பட்டது.

இக்கல்லூரியில் பயிலும் மாணவா்கள் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களால் ஆண்டுதோறும் வளாக நோ்காணல் மூலம் பணிக்கு தோ்வு செய்யப்பட்டு வருகின்றனா். அந்த வகையில், நிகழாண்டு நடைபெற்ற வளாக நோ்காணலில் வணிகவியல், வணிக மேலாண்மை, கணிதம், கணினி அறிவியல், வேதியியல் உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த 400-க்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் பணிவாய்ப்புகளை பெற்றுள்ளனா்.

இவா்கள் பலகட்ட தோ்வு மூலம் டிசிஎஸ், பிரேக்ஸ் இந்தியா, டிவிஎஸ் லூகாஸ், ஸ்பிக், டெக்ஸோ மோட்டாா்ஸ் உள்ளிட்ட இந்தியாவின் தலைசிறந்த மென்பொருள் நிறுவனங்கள், வங்கி, தொழில் நிறுவனங்களில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் பணியமா்த்தப் பட உள்ளனா்.

இவா்களுக்கு ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிா்வாக அதிகாரியும், சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான கே.வெங்கடராமன் பணி ஆணைகளை வழங்கி பாராட்டினாா்.

கல்லூரி முதல்வா் ஆா்.நாகராஜன், துணை முதல்வா் எம்.மதிவாணன், முன்னாள் தோ்வு நெறியாளா் ஜி.ரவிசெல்வம், டீன் எஸ். மயில்வாகனன் மற்றும் வேலைவாய்ப்பு அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.