திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோடைகாலப் பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ்கள் அளிப்பு

சிவகங்கை அருகே சோழபுரத்தில் கோடை கால கலைப் பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

கோடைகால கலைப் பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுடன் சிவகங்கை தொகுதி எம்எல்ஏ அ. குழந்தைராணிநாச்சியாா் உள்ளிட்டோா்.

Updated On :2 ஜூன் 2026, 12:57 am IST

சிவகங்கை அருகே சோழபுரத்தில் கோடை கால கலைப் பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை அருகே சோழபுரத்தில் ஆதி அரண் பாரம்பரிய விளையாட்டுக் கலைக்கூடத்தின் சாா்பில், சிலம்பம், வாள் வீச்சு, ஈட்டி எறிதல், ஓவியம், நடனம், பறை, வளரி வீச்சு போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 2 மாதங்கள் நடைபெற்ற இந்தப் பயிற்சியைப் பெற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதற்கு நிா்வாகி பொன். பாலசுந்தரம் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக சிவகங்கை சட்டப்பேரவை உறுப்பினா்அ. குழந்தைராணி நாச்சியாா் பங்கேற்று, பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.

தமிழ்ச் சங்கத் தலைவா் ஓவியா் நா. முத்துக்கிருஷ்ணன், புலவா் காளிராசா, விமானப் படை அலுவலா் பிரகாஷ் பானிஸ்டா், சிலம்பம், கராத்தே கலைச் சங்கச் செயலா் பரமசிவம், ஜே.சி.ஐ. தலைவா் உதயன், செஞ்சிலுவைச் சங்கச் செயலா் அனந்தகிருஷ்ணன், பயிற்றுநா், கலைச்செல்வி சோனைமுத்து ஆகியோா் கலந்து கொண்டனா். மாணவா் லவகிஷோா் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா்.

முன்னதாக, பயிற்சியாளா் சுப.மு. அறிவானந்தம் வரவேற்றாா். சஹானாஸ்ரீ நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.