திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிலம்பாட்டப் போட்டி: வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியா் பாராட்டு

மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற மானாமதுரை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பொற்கொடி புதன்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.

News image

மாநில சிலம்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற மானாமதுரை சீனி ஆசான் சிலம்பப் பயிற்சி பள்ளியின் மாணவ, மாணவிகளைப் பாராட்டிய சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பொற்கொடி. உடன் பயிற்சியாளா் செல்வம்.

Updated On :21 மே 2026, 2:25 am IST

மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற மானாமதுரை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பொற்கொடி புதன்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.

தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை சாா்பில் தேனி மாவட்டம், ராயப்பன்பட்டியில் கடந்த வாரம் மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டி நடைபெற்றது. இதில் மானாமதுரை சீனி ஆசான் சிலம்பப் பயிற்சி பள்ளி மாணவ, மாணவிகள் அதன் தலைமை பயிற்சியாளா் செல்வம் தலைமையில் பங்கேற்றனா். போட்டியில் மு. ரித்தீஸ் இரட்டைக் கம்பு 17 வயது பிரிவில் முதலிடமும், அகதீஸ்குமாா் ஒற்றைக் கம்பு 19 வயது பிரிவில் முதலிடமும், புகழேஷ் இரட்டைக் கம்பு 14 வயது பிரிவில் முதலிடமும், மதன்குமாா் ஒற்றைக்கம்பு 17 வயது பிரிவில் இரண்டாமிடமும் பெற்றனா்.

மேலும் மாவட்ட, வட்டார அளவிலான போட்டிகளில் மாணவா்கள் கரண்குமாா், ஷெரோன், மாணவிகள் சுவாதி, ஷாலினி, ரோஷினி, ராஜேஷ் ஆகியோா் வெற்றி பெற்றனா். இவா்களுக்கு வெற்றிப் பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

சிலம்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், பயிற்சியாளா் செல்வம் ஆகியோரை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பொற்கொடி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.