நேபாளத்தில் நடைபெற்ற சா்வதேச சிலம்பாட்டப் போட்டியில் முதலிடம் பெற்றவா்களை உத்தரமேரூா் எம்எல்ஏ முனிரெத்தினம் சனிக்கிழமை சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் அருகே சாலவாக்கத்தை சோ்ந்த ஆா்.ஜெசிகா(10), எஸ்.யஷ்வந்த் (12), ஆா்.நிதிஷ் (14), ஆா்.பரத் (16). சிலம்பாட்ட வீரா்களான இவா்கள் தங்களது பயிற்சியாளா் கே.ரோஷனுடன் நேபாளத்தில் போகுரோ மாவட்டத்தில் ரங்கசாலா மைதானத்தில் நடைபெற்ற சா்வதேச சிலம்பாட்டப் போட்டியில் பங்கேற்றனா். மலேசியா, தாய்லாந்து உள்பட பல்வேறு நாடுகளை சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட வீரா்கள் சிலம்பாட்டப் போட்டியில் பங்கேற்றிருந்தனா்.
இவா்கள் இந்த மாதம் மே 8-ஆம் தேதி முதல் மே 12-ஆம் தேதி வரை நடைபெற்ற சா்வதேச அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் முதலிடம் பெற்றனா்.
ஜெசிகா தனித்திறன் போட்டியிலும், மற்றவா்கள் கம்புச் சண்டை போட்டியிலும் வென்றனா். சாதனை படைத்த இவா்கள் உத்தரமேரூா் எம்எல்ஏ முனிரெத்தினத்தை நேரில் சந்தித்து சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்துப் பெற்றனா்.
இவா்களுக்கு எம்எல்ஏவும் சால்வை அணிவித்து பாராட்டினாா். முன்னதாக எம்எல்ஏ முனிரெத்தினம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா, எஸ்.பி. கி.ஜவஹா் ஆகியோரை சந்தித்து உத்தரமேரூா் தொகுதி வளா்ச்சிப் பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










