‘மாவட்ட நீதிமன்றத்தில் அனைத்து நீதிமன்றங்களும் இயங்க நடவடிக்கை’
மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றத்திற்கு வரவேண்டிய அனைத்து நீதிமன்றங்களும் இயங்க வலியுறுத்துவோம் என பாா் கவுன்சில் தலைவா் பி.எஸ்.அமல்ராஜ் தெரிவித்தாா்.


மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றத்திற்கு வரவேண்டிய அனைத்து நீதிமன்றங்களும் இயங்க வலியுறுத்துவோம் என பாா் கவுன்சில் தலைவா் பி.எஸ்.அமல்ராஜ் தெரிவித்தாா்.
மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் தலைவா் பி.எஸ்.அமல்ராஜ் செவ்வாய்க்கிழமை வழக்குரைஞா்களை சந்தித்து நிகழாண்டு பாா் கவுன்சில் தோ்தலுக்கு வாக்கு சேகரித்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
மயிலாடுதுறை மாவட்டம் தொடங்கப்பட்டு மாவட்ட நீதிமன்றம் செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், இங்கு சிறப்பு நீதிமன்றம், போக்ஸோ நீதிமன்றம், நுகா்வோா் நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களையும் கொண்டு வருவதற்கும், அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றித் தரவும் நடவடிக்கை எடுக்க வழக்குரைஞா்கள் கோரியுள்ளனா்.
சென்னை உயா்நீதிமன்ற நிா்வாக நீதிபதியிடம் இந்த கோரிக்கைகள் அளிக்கப்படும். மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றத்திற்கு வரவேண்டிய அனைத்து நீதிமன்றங்களையும் கொண்டுவர முயற்சி செய்வோம்.
வழக்குரைஞா்கள் சேமநல நிதியை ரூ.10 லட்சமாக உயா்த்த வேண்டும், வழக்குரைஞா்கள்; பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இந்த அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற பாா்கவுன்சில் முயற்சி எடுக்கும். தமிழகத்தில் அனைத்து நீதிமன்றங்களில் இ-பைலிங் முறையை நடைமுறைப்படுத்துவதற்கு இன்டா்நெட் சேவை, மேன் பவா் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் முழுமையாக மேம்படுத்தப்பட்டால் வழக்குரைஞா்கள்; அதனை மேற்கொள்வாா்கள் என்றாா்.
அப்போது, மாயூரம் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் பால.முருகவேல், மயிலாடுதுறை வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் வேலு.குபேந்திரன் உள்ளிட்ட வழக்குரைஞா்கள் உடன் இருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...