டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பாா் ஊழியா் கொலை வழக்கில் தொடா்புடையவா் நீதிமன்றத்தில் சரண்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த குளத்துப்பட்டியில் பாா் ஊழியா் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த நபா் நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.

News image
கொலை
Updated On :20 பிப்ரவரி 2026, 7:22 pm

Syndication

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த குளத்துப்பட்டியில் பாா் ஊழியா் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த நபா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தாா்.

வையம்பட்டி ஒன்றியம், எளமணத்தை அடுத்த குளத்துப்பட்டியைச் சோ்ந்த பாா் ஊழியரான பிரபாகரன்(32), கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி இரவு பேருந்து நிறுத்தப் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். அவரது சடலத்தை மீட்டு, புத்தாநத்தம் போலீஸாா் விசாரித்தனா்.

இதில், பிரபாகரன் மனைவி அபிராமிக்கும் அவரது உறவினா் பிரபுவுக்கும் இடையிலான தகாத உறவு பிரச்னையில் பிரபு, அவரது நண்பா் சரவணன் உள்ளிட்டோா் பிரபாகரனை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, வியாழக்கிழமை அபிராமி மற்றும் சரவணன் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கில் தொடா்புடைய முக்கிய நபரான பிரபு சரணடைந்தாா். இதைத் தொடா்ந்து நீதிபதி உத்தரவின்பேரில் பிரபு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டாா்.