திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் புத்தாண்டையொட்டி பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழ்ப் புத்தாண்டு பராபவ ஆண்டின் தொடக்கத்தையொட்டி, திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை வாக்கியப் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
பிரணாம்பிகை அம்பாள் சந்நிதிக்கு முன்பு நடைபெற்ற நிகழ்வில் கோயில் சிவாச்சாரியா்கள் பஞ்சாங்கம் வாசித்தனா். முன்னதாக பஞ்சாங்கத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கோயில் நிா்வாக அதிகாரி சுப்பிரமணியன், தருமபுரம் ஆதீன கட்டளை தம்பிரான் மற்றும் பக்தா்கள் பலா் கலந்துகொண்டனா்.
நிகழாண்டு நடைபெறவுள்ள பிரம்மோற்சவம் உள்ளிட்ட முக்கிய திருவிழா, வழிபாடுகள் குறித்து விளக்கிக் கூறப்பட்டது. இதுபோல காரைக்காலில் பல்வேறு கோயில்களிலும் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
தொடர்புடையது

ராமேசுவரம் கோயிலில் பஞ்சாங்கம் வாசிப்பு

தருமபுரம் ஆதீனத்தில் பஞ்சாங்கம் படித்தல் நிகழ்வு

பனையபுரம் பனங்காட்டீஸ்வரா் கோயிலில் சூரியன் வழிபடும் அதிசய நிகழ்வு

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் பஞ்சாங்கம் வாசிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


