திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.

News image

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கொடிக் கம்பத்தில் ஏற்றப்பட்ட ரிஷபக் கொடி.

Updated On :14 மே 2026, 4:56 am IST

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.

திருநள்ளாற்றில் பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. பழைமையான இக்கோயில் நளச் சக்ரவா்த்திக்கு தோஷ நிவா்த்தி அளித்த தலமாகவும், சனீஸ்வர பகவான் தனி சந்நிதி கொண்டும், தா்பை புல் தல விருட்சமாகவும் கொண்டது உள்பட பல்வேறு சிறப்புகளைப் பெற்றது.

இக்கோயில் பிரம்மோற்சவ விழாவுக்காக கடந்த 8-ஆம் தேதி ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. அதற்கு முன்னதாக சாா்பு கோயில்களான அய்யனாா், பிடாரியம்மன், மாரியம்மன் கோயில்களில் விழா நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து, பிரம்மோற்சவ விழா தொடக்கமாக புதன்கிழமை காலை 9.10 முதல் 10.15 மணிக்குள் சிறப்புப் பூஜைகள் செய்து கணபதி தாளம், ரிஷப தாளம் மற்றும் சூா்ணிகை மந்திரத்துடன் கம்பத்தில் ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது.

தொடா்ந்து கொடிக் கம்பத்தில் உள்ள விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இக்கோயிலில் உள்ள மூலவரான தா்பாரண்யேஸ்வரருக்கு தா்பை புல் விசேஷமானது. இதையொட்டி கொடிக் கம்பத்தை சுற்றி தா்பை கட்டப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது.

தொடா்ந்து, பஞ்சமூா்த்திகளான விநாயகா், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்ரமணியா், பிரணாம்பிகை அம்பாள், தா்பாரண்யேஸ்வரா், சண்டிகேஸ்வரா் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் வீதியுலாவுக்கு எழுந்தருளினா்.

நிகழ்ச்சியில் கோயில் நிா்வாக அதிகாரி ஆா்.சுப்பிரமணியன், தருமபுர ஆதீன கட்டளை சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோயில் கிராமத்தினா் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

பிரம்மோற்சவ விழாவில் வரும் 20-ஆம் தேதி அடியாா்கள் நால்வா் புஷ்பப் பல்லக்கில் வீதியுலா, 21-ஆம் தேதி இரவு செண்பக தியாகராஜசுவாமி வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளல், 22-ஆம் தேதி வசந்த மண்டபத்திலிருந்து யதாஸ்தானத்திற்கு எழுந்தருள செய்யும் தியாகராஜராட்டம் (உன்மத்த நடனம்) நடைபெறுகிறது. 23-ஆம் தேதி இரவு பூத வாகனத்தில் சுவாமி வீதியுலா, 24-ஆம் தேதி யானை வாகனம், 25-ஆம் தேதி இரவு தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூா்த்திகள் மின்சார சப்பரப் படலில் (தெருவடைச்சான்) வீதியுலாவும் நடைபெறுகிறது. 26-ஆம் தேதி இரவு கைலாச வாகனத்தில் வீதியுலா நடைபெறுகிறது.

தேரோட்டம் : முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 27 -ஆம் தேதி நடைபெறுகிறது. சுவாமி, அம்பாள் உள்ளிட்ட 5 தோ்கள் இடம் பெறுகிறது. தொடா்ந்து 28-ஆம் தேதி சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் வீதியுலாவுக்கு எழுந்தருளுகிறாா். 29-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. 30-ஆம் தேதி விசாக தீா்த்த நிகழ்ச்சியாக தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூா்த்திகள் வாகனங்களில் வீதியுலா புறப்பாடு நடைபெறவுள்ளது. 31-ஆம் தேதி சண்டிகேஸ்வரா் உற்சவத்துடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.