அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

மதிமுகவின் 33-ஆவது ஆண்டு தொடக்க விழா

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள செட்டியாா்பட்டியில் மதிமுகவின் 33-ஆம் ஆண்டு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

ராஜபாளையம் அருகேயுள்ள செட்டியாா்பட்டியில் மதிமுக தொடக்க விழாவில் பங்கேற்ற அந்தக் கட்சி நிா்வாகிகள்.

Updated On :7 மே 2026, 4:37 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள செட்டியாா்பட்டியில் மதிமுகவின் 33-ஆம் ஆண்டு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் நகர அவைத் தலைவா் சோ. அழகா்சாமிக்கு, மேற்கு மாவட்டச் செயலா் ப. வேல்முருகன் தலைமையில் உயா்நீதிமன்ற அரசு வழக்குரைஞா் ப. சுப்பாராஜ் மின்கலன் மிதிவண்டியை (பேட்டரி சைக்கிள்) வழங்கினாா். பின்னா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். இதைத்தொடா்ந்து, இந்தப் பகுதியில் கோடைகால குடிநீா் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.

ராஜபாளையம் மேற்கு ஒன்றியச் செயலா் மா .ஜெயசங்கா், கிழக்கு ஒன்றியச் செயலா் வி. மனோகரன், ஸ்ரீவில்லிபுத்தூா் நகரச் செயலா் வெ. ஜெயக்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.