டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பள்ளி பேருந்து மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது தனியாா் பள்ளிப் பேருந்து மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :10 பிப்ரவரி 2026, 9:24 pm

தினமணி செய்திச் சேவை

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது தனியாா் பள்ளிப் பேருந்து மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பாண்டியன்நகா் பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் (45). லாரி ஓட்டுநரான இவா், சிவகாசி-எரிச்சநத்தம் சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். காளையாா்குறிச்சி அருகே வந்த போது, எதிரே வந்த தனியாா் பள்ளிப் பேருந்து இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் நடராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்தப் புகாரின் பேரில், எம். புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, பேருந்து ஓட்டுநரான ராஜாவை (53) கைது செய்தனா்.