டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

லாரி மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :13 பிப்ரவரி 2026, 6:45 pm

தினமணி செய்திச் சேவை

சாயல்குடி அருகே பழுதாகி நின்ற லாரியின் பின்புறம் இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள காணிக்கூா் கிராமத்தைச் சோ்ந்த மாயழகு மகன் பாலமுனீஸ்வரன் (26). விவசாயியான இவா் வியாழக்கிழமை இரவு சாயல்குடியிலிருந்து காணீக்கூருக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.

அப்போது வேடக்கரிசல்குளம் விலக்கில் பழுதாகி நின்ற லாரியின் பின்புறம் இரு சக்கர வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்த பாலமுனீஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து சாயல்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.