லாரி மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

கோப்புப் படம்
Updated On :13 பிப்ரவரி 2026, 6:45 pm

சாயல்குடி அருகே பழுதாகி நின்ற லாரியின் பின்புறம் இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள காணிக்கூா் கிராமத்தைச் சோ்ந்த மாயழகு மகன் பாலமுனீஸ்வரன் (26). விவசாயியான இவா் வியாழக்கிழமை இரவு சாயல்குடியிலிருந்து காணீக்கூருக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.
அப்போது வேடக்கரிசல்குளம் விலக்கில் பழுதாகி நின்ற லாரியின் பின்புறம் இரு சக்கர வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்த பாலமுனீஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து சாயல்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...