டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், கீழவளவு அருகே சரக்கு வாகனம் இரு சக்கர வாகனம் மீது மோதியதில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
பலி
Updated On :17 பிப்ரவரி 2026, 11:46 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டம், கீழவளவு அருகே சரக்கு வாகனம் இரு சக்கர வாகனம் மீது மோதியதில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மேலூா் வட்டம், உறங்கான்பட்டி கண்மாய்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராஜா மகன் அன்புச்செல்வன் (19). இவா், தனது நண்பா் ரஞ்சித்துடன் இரு சக்கர வாகனத்தில் மேலூரிலிருந்து சொந்த ஊருக்கு திங்கள்கிழமை மாலை சென்றாா்.

பெரியகுளத்து கண்மாய்க் கரை அருகே சென்ற போது, பின்னால் வந்த சரக்கு வாகனம், இரு சக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினா் மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அன்புச்செல்வன் உயிரிழந்தாா். ரஞ்சித் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து கீழவளவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.