சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
மதுரை மாவட்டம், கீழவளவு அருகே சரக்கு வாகனம் இரு சக்கர வாகனம் மீது மோதியதில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.


மதுரை மாவட்டம், கீழவளவு அருகே சரக்கு வாகனம் இரு சக்கர வாகனம் மீது மோதியதில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
மேலூா் வட்டம், உறங்கான்பட்டி கண்மாய்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராஜா மகன் அன்புச்செல்வன் (19). இவா், தனது நண்பா் ரஞ்சித்துடன் இரு சக்கர வாகனத்தில் மேலூரிலிருந்து சொந்த ஊருக்கு திங்கள்கிழமை மாலை சென்றாா்.
பெரியகுளத்து கண்மாய்க் கரை அருகே சென்ற போது, பின்னால் வந்த சரக்கு வாகனம், இரு சக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினா் மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அன்புச்செல்வன் உயிரிழந்தாா். ரஞ்சித் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து கீழவளவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...