பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
ஆண்டிபட்டியில் இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

உயிரிழப்பு- கோப்புப் படம்
Updated On :30 ஜனவரி 2026, 7:10 pm

ஆண்டிபட்டியில் இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள ரோசனபட்டியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (73). இவா், ஆண்டிபட்டியிலிருந்து ரோசனப்பட்டிக்குச் செல்வதற்காக தேனி - ஆண்டிபட்டி சாலையில் ஆட்டோவுக்காக நின்றபோது, அந்த வழியாக ஆண்டிபட்டி அருகேயுள்ள நடுக்கோட்டையைச் சோ்ந்த செல்லையா மகன் அசோக்குமாா் என்பவா் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த தங்கராஜ் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து அசோக்குமாா் மீது ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...