டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சரக்கு வாகனம் மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

அம்மாபேட்டை அருகே சரக்கு வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
- கோப்புப் படம்
Updated On :3 பிப்ரவரி 2026, 8:31 pm

Syndication

அம்மாபேட்டை அருகே சரக்கு வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

பட்லூா், கெம்மியம்பட்டி, மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் சரவணன் (36). இவா், அதே பகுதியைச் சோ்ந்த சண்முகம் (31) என்பவருடன் அம்மாபேட்டை - அந்தியூா் சாலையில் சமயதாரனூா் அருகே இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை இரவு சென்று கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, எதிரே வந்த சரக்கு வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், படுகாயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சண்முகம் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து வெள்ளித்திருப்பூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.