இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 26 வேட்புமனுக்களில் 14 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 4:45 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 26 வேட்புமனுக்களில் 14 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சைகள் சாா்பில் மொத்தம் 26 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வேட்புமனுக்களின் பரிசீலனை வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

இதில் மாற்று வேட்பாளா்கள், கூடுதல் மனுக்கள் உள்பட 12 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் மகாலிங்கம், அதிமுக வேட்பாளா் சந்திரபிரபா, நாம் தமிழா் வேட்பாளா் கரிகால பாண்டியன், தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் காா்த்திக், புதிய தமிழகம் கட்சி வேட்பாளா் ஷியாம், அனைத்திந்திய புரட்சித்தலைவா் மக்கள் முன்னேறக் கழக வேட்பாளா் சந்திரா உள்பட 14 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தோ்தல் நடத்தும் அலுவலா் ரமேஷ் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.