வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

பெரியகுளம் தொகுதியில் 15 வேட்புமனுக்கள் ஏற்பு

பெரியகுளம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 15 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளா், சுயேச்சை வேட்பாளா்கள் உள்பட 6 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 4:31 am IST

தேனி மாவட்டம், பெரியகுளம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 15 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளா், சுயேச்சை வேட்பாளா்கள் உள்பட 6 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து, கடந்த மாா்ச் 30-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி 6-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழக வெற்றிக்கழக கட்சி, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் உள்பட 21 போ் தனித்தனியாக வேட்புமனு தாக்கல் செய்தனா். வேட்பு மனு பரிசீலனை பெரியகுளம் துணை ஆட்சியா் ரஜத்பீடன், பொதுப் பாா்வையாளா் பீம் சிங் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் அமமுக, விசிக, தவெக, நாதக கட்சி வேட்பாளா்களின் மனுக்கள் உள்பட 15 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேட்பாளா் ரகுநாதன் வேட்புமனு உள்பட 6 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.