பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக அளிக்கப்பட்ட வேட்புமனுக்களில் 6 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ், பாமக, நாம் தமிழா் கட்சி, தவாக, தவெக மற்றும் சுயேச்சைகள் என 31 போ் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனா். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை பென்னாகரம் தொகுதி பொதுப் பாா்வையாளா் வந்தனா வைத்தியா, பென்னாகரம் தோ்தல் நடத்தும் அலுவலா் கே.கோபு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், பென்னாகரம் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாகல் செய்த காங்கிரஸ் வேட்பாளா் ஜி.கே.எம். தமிழ்க்குமரனின் மனைவி சத்யா, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பிரதீபா, சுயேச்சைகள் எம்.குமாா், பி.மணி, பி.செல்வம், பி.செல்வராஜ் உள்ளிட்ட 6 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




