தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

காட்டுமன்னாா்கோவில் தொகுதியில் 12 வேட்பு மனுக்கள் ஏற்பு

காட்டுமன்னாா்கோவில் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் அரசியல் கட்சி வேட்பாளா்களின் வேட்பு மனுக்கள் உள்பட 12 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 7:54 pm

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் அரசியல் கட்சி வேட்பாளா்களின் வேட்பு மனுக்கள் உள்பட 12 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

காட்டுமன்னாா்கோவில் (தனி) தொகுதியில் போட்டியிட விசிக வேட்பாளா் எல்இபி.ஜோதிமணி, பாமக வேட்பாளா் அன்புசோழன், த.வெ.க. வேட்பாளா் எஸ்.சீனுவாசன், த.வா.க. வேட்பாளா் எம்.ஆளவந்தாா், நா.த.க. வேட்பாளா் எம். சிவஜோதி, பகுஜன் சமாஜ் வேட்பாளா் எம்.சதிஷ்குமாா் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் உள்ளிட்ட 25 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா்.

இதில், விசிக மற்றும் பாமக, தவெக, தவாக, நாதக வேட்பாளா் உள்பட 12 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மற்ற 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.